பணம், பதவிக்காக மக்களை ஏமாற்றும் கேஜ்ரிவால் – அன்னா ஹசாரே

பணம், பதவிக்காக மக்களை ஏமாற்றும் கேஜ்ரிவால் – அன்னா ஹசாரே

புதுடெல்லி:

பணம், பதவிக்காக அப்பாவி மக்களை ஏமாற்றுகிறார் டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் என அன்னா ஹசாரே குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லி மேற்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக கேஜ்ரிவாலிடம் ரூ.6 கோடி கொடுத்ததாக ஆம்ஆத்மி வேட்பாளர் உதய் என்பவர் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அரவிந்த் கேஜ்ரிவால் குறித்து அன்னா ஹசாரே தெரிவிக்கையில், ஆம்ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான கேஜ்ரிவால் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டார், பணம், பதவிக்காக மக்களை ஏமாற்றி வருகிறார்.

அரசியலில் நாம் மேற்கொள்ளும் நடவடிக்கை முக்கியமானது. அரசியல் இதனை மாற்றி அமைக்கும். ஆனால், கேஜ்ரிவால், மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் காங்கிரஸ் கட்சியுடன் நட்பை உருவாக்கி ஏமாற்றி வருகிறார் என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்