ஆந்திர, தெலங்கானா முதல்வர்கள் ஆலோசனை!

ஆந்திர, தெலங்கானா முதல்வர்கள் ஆலோசனை!

ஹைதராபாத்:

ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில முதல்வர்களின் ஆலோசனை கூட்டம் இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவுடன் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் கோதாவரி, கிருஷ்ணா நதிநீரை இருமாநிலங்களும் சமமாக பங்கிட்டுக்கொள்வதென முடிவுசெய்யப்பட்டு, இதுகுறித்த அறிக்கையை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. ஜூலை 15க்குள் இந்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

மேலும் மாநிலங்களின் பிரிவினையால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது, உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்