அமராவதி:
ஆந்திர மாநிலத்தில் அரசு மதுபானக் கடைகளின் விற்பனை இன்று முதல் தொடங்கவுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் இன்று முதல் அரசே மது விற்பனையை தொடங்க உள்ளது. ரூ.10 முதல் ரூ.250 வரை மது பாட்டில்கள் மீது கூடுதல் வரி விதித்த ஆந்திர அரசு, 4,380 மதுக்கடைகளை 3,500 கடைகளாக குறைத்து மது விற்பனையை தொடங்குகிறது.
அரசு மதுக்கடைகள் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.