தர்மபுரி:
பிரதமர் மோடி தலைமையில் இந்தியா மேம்படும் என பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மக்களவை தொகுதியில், பா.ஜ., கூட்டணியில் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்தியாளர்களின் சந்திப்பில், பிரதமர் மோடி தலைமையில் இந்தியா மேம்படும். தர்மபுரி தோல்விக்கான காரணம் கண்டறியப்படும். பாமக மீது தவறு இருந்தால் திருத்திக்கொள்வோம். மக்களின் நம்பிக்கையை பெற தொடர்ந்து பாடுபடுவோம் என அன்புமணி தெரிவித்தார்.