சென்னை:
மாநிலங்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அதிமுக கூட்டணியின் ஒப்பந்தபடி, பாமகவுக்கு ஒரு சீட்டை அதிமுக ஒதுக்கியிருந்தது. இதனையடுத்து, மாநிலங்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவதாக கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவித்தார்.
இந்நிலையில், இன்று சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் அன்புமணி ராமதாஸ் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதிமுக வேட்பாளர்கள் முகமது ஜான், சந்திரசேகர்
ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். உடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருந்தனர்.