அமித்ஷாவுடன் ஓபிஎஸ் ரகசிய பேச்சா..?

அமித்ஷாவுடன் ஓபிஎஸ் ரகசிய பேச்சா..?

புதுடெல்லி:

பாஜக தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் விருந்து நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், பல்வேறு கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

டெல்லி அசோகா நட்சத்திர ஓட்டலில் நடந்த இந்த விருந்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், பிரேமலதா விஜயகாந்த், வாசன், சரத்குமார், ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் அன்று இரவே தமிழக தலைவர்கள் அனைவரும் சென்னைக்கு வந்தடைந்தனர். ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மட்டும் விருந்து நடைபெற்ற அசோகா ஓட்டலிலேயே தங்கினார்.

அந்த ஓட்டலில் அன்று இரவே பா.ஜ., தலைவர்களின் முக்கிய தலைவர்கள் மட்டுமே கலந்துகொண்டு தனியாக ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது. அதில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.

அப்போது அமித்ஷாவுடன் தனியாக பேசியது என்ன? கூட்டணி குறித்து பேசப்பட்டதா என்று கேள்வி எழுந்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்