‘‘வதந்திகளை நம்பவேண்டாம்’’ அமித்ஷா பேச்சு

‘‘வதந்திகளை நம்பவேண்டாம்’’ அமித்ஷா பேச்சு

புதுடெல்லி:

காஷ்மீர் விவகாரத்தில் பரப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மக்களவையில் பேசிய அமித்ஷா, அவசரநிலையை அமல்படுத்தியதன் மூலம் காங்கிரஸ் ஒட்டுமொத்த இந்தியாவையும் யூனியன் பிரதேசமாக மாற்றியது. ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் எடுத்த நடவடிக்கை பற்றி பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். தமிழகம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட எந்த மாநிலத்திலும் 370வது சட்டப்பிரிவு கிடையாது.

சிறப்பு பிரிவு காரணமாக காஷ்மீரை இந்தியாவின் ஒரு மாநிலமாக பார்க்க முடியவில்லை. காஷ்மீரை ஆக்கிரமிக்க பாகிஸ்தான் முயன்றபோதே பிரிவு 370 காலாவதியாகிவிட்டது. இந்தியாவின் இரும்பு மனிதராகும் எண்ணம் இல்லை என அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்