புதுடெல்லி:
நாடு முழுவதும் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமித்ஷா தனது டுவிட்டர் பதிவில், நாடு முழுவதும் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும். ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உண்டு. ஆனால், ஒரே மொழி அவசியம்.
நாட்டுக்கு ஒரு மொழி இருப்பது அவசியம். அது, உலகில் இந்தியாவின் அடையாளமாக மாற வேண்டும். ஒரே மொழியால் ஒற்றுமையை கட்டமைக்க முடியும் என்றால், அது இந்தி மொழியே. இந்தி மொழி அதிகமான மக்களால் பேசப்படும் மொழியாகும் என அவர் பதிவிட்டுள்ளார்.
भारत विभिन्न भाषाओं का देश है और हर भाषा का अपना महत्व है परन्तु पूरे देश की एक भाषा होना अत्यंत आवश्यक है जो विश्व में भारत की पहचान बने। आज देश को एकता की डोर में बाँधने का काम अगर कोई एक भाषा कर सकती है तो वो सर्वाधिक बोले जाने वाली हिंदी भाषा ही है। pic.twitter.com/hrk1ktpDCn
— Amit Shah (@AmitShah) September 14, 2019