‘‘துணிவிருந்தால் கைது செய்யுங்கள்’’ மம்தாவுக்கு அமித்ஷா சவால்!

‘‘துணிவிருந்தால் கைது செய்யுங்கள்’’ மம்தாவுக்கு அமித்ஷா சவால்!

ஜோய்நகர்:

கொல்கத்தாவை விட்டு செல்கிறேன். துணிவிருந்தால் என்னை கைது செய்து பாருங்கள என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா சவால் விடுத்துள்ளார்.

மேற்கு வங்கத்தின், ஜாதவ்பூர் என்ற இடத்தில் பேரணி நடத்துவதற்காக அமித்ஷாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும அப்பகுதியில் அவரது ஹெலிகாப்டர் தரை இறங்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, ஜோய்நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில்பேசிய அமத்ஷா, இன்று நான் 3 இடங்களுக்கு பிரசாரம் செய்வதாக இருந்தது. ஆனால், மம்தாவின் உறவினர் 3 தொகுதிகளில் ஒன்றில் போட்டியிடுகிறார். அதனால் அவரது உறவினர் தோற்றுவிடுவாரோ என மம்தா பயப்படுகிறார்.

அதனால்தான், அந்த இடங்களில் நான் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி மறுத்துள்ளார். ஜெய்ராம் என முழக்கமிட்டு கொல்கத்தாவிலிருந்து செல்கிறேன். உங்களுக்கு துணிவிருந்தால் என்னை கைது செய்யுங்கள் என்று மம்தாவுக்கு சவால் விடுத்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்