ஒரே நாடு.. ஒரே ரேஷன் கார்டு அமல்.. ராம்விலாஸ் பஸ்வான் அதிரடி

ஒரே நாடு.. ஒரே ரேஷன் கார்டு அமல்.. ராம்விலாஸ் பஸ்வான் அதிரடி

டெல்லி :
இந்தியா முழுவதும் ஒரே குடும்ப அட்டையை பயன்படுத்தி உணவு பொருட்களை வாங்கும் வகையில் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

இதன் மூலம் நாட்டின் எந்த பகுதியை சேர்ந்தவரும், எந்த பகுதியிலும் பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்களை வாங்க முடியும்.

இந்த திட்டத்துக்கான பணிகளை மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்தி வரும் நிலையில், முதல்கட்டமாக நேற்று 4 மாநிலங்களில் இந்த திட்டத்தை மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தொடங்கி வைத்தார்.

அதன்படி ஆந்திரா, -தெலுங்கானா மற்றும் குஜராத்-, மராட்டியம் மாநிலங்களுக்கு இடையே பொருட்கள் வாங்கிக்கொள்ளும் திட்டம் தொடங்கப்பட்டது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்