பிறந்தவுடன் 8 குழந்தைகள் பலி

  • In General
  • September 24, 2019
  • 187 Views
பிறந்தவுடன் 8 குழந்தைகள் பலி

அல்ஜீரியா:

அல்ஜீரியா நாட்டில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 குழந்தைகள் பலியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு அல்ஜீரியாவில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் இன்று அதிகாலை 3.50 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைத்தனர்.

இதில், 11 குழந்தைகள், 107 பெண்கள் மற்றும் 28 ஊழியர்கள் மீட்கப்பட்டனர். ஆனால், 8 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தீவிபத்து குறித்து விசாரிக்க, அந்நாட்டு பிரதமர் நார்டின் பெடோயின், சுகாதாரத்துறை அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்