மும்பை போலீசுக்கு அக்ஷய்குமார் 2 கோடி நிதி

  • In Cinema
  • April 29, 2020
  • 149 Views
மும்பை போலீசுக்கு அக்ஷய்குமார் 2 கோடி நிதி

மத்திய அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு 25 கோடி ரூபாய் வழங்கி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார். அதன் பிறகு மும்பை மாநகராட்சிக்கு 3 கோடி ரூபாய் வழங்கினார். தற்போது மும்பை காவல்துறையின் அறக்கட்டளைக்கு 2 கோடி ரூபாய் நிதி வழங்கி இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: கொரோனாவை எதிர்த்து உயிரை மாய்த்துக் கொண்ட மும்பை போலீஸ் அதிகாரிகள், சந்திரகாந்த் பெண்டுர்கர் மற்றும் சந்தீப் சர்வே ஆகியோருக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். நான் எனது கடமையைச் செய்தேன், நீங்களும் செய்வீர்கள் என்று நம்புகிறேன். உங்களால்தான் (போலீசாரால்) நாங்கள் பாதுகாப்பாகவும் உயிருடனும் இருக்கிறோம் என்பதை மறந்து விட மாட்டோம் என கூறியுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்