ராஞ்சி:
கட்சியில் ஏற்பட்ட மோதல் காரணமாக ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியிலிருந்து அஜோய் குமார் ராஜினாமா செய்துள்ளார்.
இதுகுறித்து அஜோய் குமார் அளித்த 3 பக்க ராஜினாமா கடிதத்தில், ஜார்க்கண்டில் காங்கிரஸ் கட்சியில் எனது நேர்மையான முயற்சிகளும், நேர்மையையும் தடுக்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் சுபோத் காந்த் சஹாய் ஆதரவாளருக்கும், அஜோய் குமாரின் ஆதரவாளர்களுக்கும் இடையே கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி மோதல் வெடித்ததையடுத்து போலீசார் தடியடி நடத்தியது குறிப்பிடத்தக்கது.