அதிமுக நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது.. 4 எம்.எல்.ஏ.க்கள் ஆப்சென்ட்.!

அதிமுக நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது.. 4 எம்.எல்.ஏ.க்கள் ஆப்சென்ட்.!

மதுரை வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா கடந்த வாரம் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அடையாளம் காட்டப்பட்டவர் தலைமை ஏற்க வேண்டும். அதிமுகவே பொறுத்தவரையில் ஒரே தலைமை வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இவரது கருத்துக்கு மேலும் குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.வும் ஆதரவு தெரிவித்திருந்தார். இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் தலைமை கழக உறுப்பினர்கள் கலந்து கொள்கின்ற ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் பங்கேற்றுள்ளனர். இதில் ஒருவரே தலைமை ஏற்க வேண்டும் என்று முடிவெடுக்க வாய்ப்புள்ளது.

இந்த கூட்டத்தில் 3 எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு வந்து சேரவில்லை அதனால் பங்கேற்கவில்லை என்று கூறியுள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்