அதீப் தப்பிவந்த விவகாரம்: குடியுரிமை அதிகாரிகளுடன் ஆலோசனை

அதீப் தப்பிவந்த விவகாரம்: குடியுரிமை அதிகாரிகளுடன் ஆலோசனை

தூத்துக்குடி:

மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அதீப் தப்பி வந்த விவகாரம் குறித்து தூத்துக்குடியில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

மாலத்தீவில் வீட்டுக்காவலில் இருந்த முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் அப்துல்லா, அந்நாட்டிலிருந்து தப்பித்து சரக்கு கப்பல் மூலம் இந்தியா வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து தூத்துக்குடி கடல் பகுதியில் நேற்று வந்திறங்கிய அகமத் அதீப் அப்துல்லாவை இந்திய உளவுத்துறை கைது செய்தது.

இந்நிலையில், மாலத்தீவு முன்னாள் அதிபர் அகமத் அதீப் அப்துல்லாவை தப்பிவந்த விவகாரம் குறித்து, டெல்லியில் இருந்து வந்துள்ள குடியுரிமை அதிகாரிகளுடன் கப்பற்படை அதிகாரிகள் தூத்துக்குடியில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்