அகமதாபாத் கரோனா சிகிச்சை மருத்துவமனையில் தீ விபத்து- எட்டு நோயாளிகள் பரிதாப பலி

அகமதாபாத் கரோனா சிகிச்சை மருத்துவமனையில் தீ விபத்து- எட்டு நோயாளிகள் பரிதாப பலி

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஷ்ரே மருத்துவமனையில் இன்று அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 நோயாளிகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

மருத்துவமனையின் 4வது மாடியில் உள்ள ஐசியு வார்டில் இந்தத் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

பலியானவர்களில் 5 ஆண்கள், 3 பெண்கள் அடங்குவர். இவர்கள் இங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் ஆவார்கள்.

இந்த மருத்துவமனையில் பிற நோயாளிகள் 40 பேர் சிகிச்சைப் பெற்று வந்தனர். தீவிபத்தை அடுத்து இவர்கள் எஸ்விபி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன. மற்ற நோயாளிகளை வெளியேற்றியதில் போலீஸார், தீயணைப்பு வீரர்க்ள் உதவினர்.இது குறித்து அகமதாபாத் நகர உதவி ஆணையர் எஸ்பி. ஸலா கூறும்போது, ‘மரணமடைந்தோர் எண்ணிக்கை 8,. தீ இன்று அதிகாலை 3.30 மணியளவில் பிடித்தது. இப்போது தீ கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. ‘ என்றார்.

(பிடிஐ தகவல்களுடன்)

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்