அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமனம் ரத்து

  • In Chennai
  • November 28, 2019
  • 168 Views
அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமனம் ரத்து

சென்னை:

மாவட்ட பால் கூட்டுறவு சங்கத் தலைவராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமனத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்க தலைவராக அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து, வனபுரம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் தேர்தல் நடத்தப்படாமலேயே தலைவராக அக்ரி கிருஷ்ணமூத்தி தேர்ந்தெடுத்தது சங்க விதிகளுக்கு எதிரானது. கூட்டுறவு விதிகளை பின்பற்றாமல், அக்ரி கிருஷ்ண தலைவராக நியமிக்கப்பட்டது செல்லாது. எனவே, பால் உற்பத்தியாளர் சங்க தலைவராக நியமித்தது ரத்து செய்யப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்