பாக்.,குடன் தொடர்பு; கோலம் போட்ட பெண் கைது

பாக்.,குடன் தொடர்பு; கோலம் போட்ட பெண் கைது

சென்னை:

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கோலம் போட்ட பெண் பாகிஸ்தான் அமைப்புடன் தொடர்புடையதாக போலீஸ் கமிஷன் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், டிசம்பர் 29ம் தேதி சென்னை பெசன்ட் நகரில், பெண்கள் சிலர் கோலம் போட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட காயத்ரி, ஆர்த்தி, பிரகதி, கல்யாணி மற்றும் மதன்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து, போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் கூறுகையில், அடுத்தவர்களின் வீட்டு வாசலில் கோலம் போட்டு தகராறு செய்ததால் தான் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், கைது செய்யப்பட்ட பெண்களில் காயத்ரி என்பவர், பாககிஸ்தான் பத்திரிகையாளர் அமைப்பில் உறுப்பினராக இருப்பதாகவும், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்