புதுடெல்லி:
டெல்லியில் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் ஷாஹின் பாக் பகுதியில் இன்று சிஏஏ எதிர்ப்பு போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த இளைஞர் ஒருவர் ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டு துப்பாக்கியால் சுட்டுள்ளார். அவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து டிசிபி சின்மோய் பிஸ்வால் கூறுகையில், டெல்லி ஷாஹீன் பாக் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீசார் மடக்கி பிடித்து தடுத்து நிறுத்தினர். அவரை கைது உடனடியாக போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். அவரின் பெயர் கபில் குஜ்ஜார் என தெரிவித்துள்ளார். நொய்டா எல்லையான டள்ளுபுரா பகுதியை சேர்ந்தவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.அவர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என அவர் தெரிவித்தார்.
டெல்லியில் தொடர்ந்து 2வது முறையாக துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#WATCH Delhi: Man who fired bullets in Shaheen Bagh has been taken away from the spot by police. The man claims to be Kapil Gujjar, a resident of Dallupura village (near Noida border). pic.twitter.com/6xHxREQOe1
— ANI (@ANI) February 1, 2020