காபுல்:
ஆப்கானிஸ்தானில் போலீஸ் தலைமையகத்தை குறிவைத்து தலிபான் தீவிரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் 18 பேர் பலியாகியுள்ளனர்.
இன்று காலை 9 மணியளவில் நடந்த இந்த தாக்குதலில் பெண்கள் உள்ளிட்ட 100 பேர் காயமடைந்துள்ளனர். சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த 31ம் தேதி ஹெராட் – கந்தாகர் நெடுஞ்சாலை அருகே அதிகாலையில் குண்டுவெடிப்பு தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 34 பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.