வழக்கறிஞருக்கு பவர் ஸ்டார் கொலை மிரட்டல்!

வழக்கறிஞருக்கு பவர் ஸ்டார் கொலை மிரட்டல்!

திருச்சி:

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வேங்கைகுறிச்சியை சேர்ந்தவர் பாண்டி. இவர் மணப்பாறை நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

இவர், நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்காக, துறையூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கில் ஆஜராகி வாதிட்டு வந்துள்ளார்.

இதுதொடர்பாக வழக்கறிஞர் பாண்டி, நேற்று பவர் ஸ்டார் சீனிவாசனை தொடர்புகொண்டு செலவுத்தொகை கேட்டபோது, சீனிவாசன் தகாத வார்த்தைகளால் பேசியது மட்டுமமல்லாமல், கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து, போனில் உரையாடிய பதிவுகளோடு, மணப்பாறை காவல் நிலையத்தில் வழக்கறிஞர் பாண்டி புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் மணப்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்