அதிமுக மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நிறைவு

அதிமுக மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நிறைவு

4 நாட்களாக நடைபெற்ற அதிமுக மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்றுடன் நிறைவு பெற்றது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்தும், தேர்தல் பணிகள் குறித்தும், அனைத்து மாவட்டங்களின் தலைமை நிர்வாகிகள், செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர் பெருமக்கள் ஆகியோர் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம், அதிமுக தலைமைக் கழகத்தில் கடந்த 10, 11, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் காலை,மாலை என இருவேளைகளில் நடைபெற்றது.

கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றது. மாவட்ட வாரியாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்