சிறுமி பலாத்காரம்; அதிமுக பிரமுகர் கைது

சிறுமி பலாத்காரம்; அதிமுக பிரமுகர் கைது

ஸ்ரீமுஷ்ணம்:

சிதம்பரம் அருகே 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக அதிமுக பிரமுகர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சிதம்பரம் அருகே ஸ்ரீமுஷ்ணம் படைவீட்டு மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் திருமுருகன். அதிமுக பிரமுகரான இவர், 17 வயது சிறுமி ஒருவரை சில மாதங்களுக்கு முன்பு வேளாங்கண்ணிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது திருமுருகன் அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் கர்ப்பமான அந்த சிறுமியை கோயிலில் வைத்து திருமுருகன் திருமணமும் செய்துகொண்டுள்ளார்.

இந்நிலையில், சிறுமி தமக்கு நேர்ந்தது குறித்து சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் அதிமுக பிரமுகர் திருமுருகனை போலீசார் கது செய்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்