விருப்ப மனு; அதிமுகவினர் ஆர்வம்

விருப்ப மனு; அதிமுகவினர் ஆர்வம்

ஓசூர்:

அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பன மனுக்களை வழங்க ஏராளமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், உள்ளாட்சி மன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்காக ஏராளமானோர் விருப்பனு மனுக்களை ஆர்வமுடன் அளித்து வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நடைப்பெறாமல் இருந்த உள்ளாட்சி தேர்தலை விரைந்து முடிக்க தமிழக மாநில தேர்தல் ஆணையம் மும்முரம் காட்டி வருகிறது.

உள்ளாட்சி தேர்தலை எதிர்க்கொள்ள தமிழகம் முழுவதும் அதிமுகவினர் படு வேகமாக பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் மாநிலம் முழுவதும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பனு பெறப்பட கழக ஒருங்கிணைப்பாளர் துணை ஒருங்கிணைப்பாளர் என இருவரும் கூட்டாக அறிவித்திருந்த நிலையில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில், ஓசூர்,தளி,பர்கூர் ஆகிய சட்டமன்ற தொகுதிக்குட்பட்டோர் உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிட ஆண்கள்,பெண்கள் என ஏராளமானோர் விருப்ப மனுக்களை அளித்து வருகின்றனர்.

ஓசூரில், கழக செய்தி தொடர்பாளர் சமரசம், கழக புரட்சி தலைவி பேரவை இணை செயலாளர் முகில் மற்றும் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் விருப்ப மனுக்களை பெற்று வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்