சென்னை:
தமிழக சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் நாளை மறுநாள் 29ம் தேதி பதவியேற்க உள்ளனர்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் தமிழக சட்டசபை தேர்தல் 18 தொகுக்கும், பின்னர் 4 தொகுகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தது. இதில் 13 தொகுதிகளில் தி.மு.க.,வும், 9 தொகுதிகளில் அ.தி.மு.க.,வும் வெற்றிபெற்றது.
இந்நிலையில், வெற்றிபெற்ற அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் 9 பேரும் வரும் 29ம் தேதி தலைமை செயலகத்தில் சபாநாயகர் அறையில் பதவியேற்கவுள்ளனர்.
இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற திமுக எம்.எல்.ஏ.,க்கள் நாளை பதவியேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.