சென்னை:
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 24ம் தேதி கூடுகிறது என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 24ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும். கழக செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலா நீக்கத்திற்கு பிறகு நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.