சென்னை:
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
தமிழகத்தில் காலியாகவுள்ள விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனும், நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.