ஒசூரில் அதிமுக ஆண்டு விழா

ஒசூரில் அதிமுக ஆண்டு விழா

ஒசூர்:

ஓசூரில், அதிமுக தொடங்கப்பட்டு 48 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதால் எம்ஜிஆர் சிலைக்கு மாலைஅணிவித்து அதிமுகவினர் மரியாதை செலுத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் அமைந்துள்ள எம்ஜிஆர் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து அதிமுகவினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

திமுகவில் இருந்து பிரிந்த எம்ஜிஆர் அண்ணா திமுக வை தொடங்கினார், அவருக்கு பிறகாக ஜெயலலிதா அவர்கள் கட்சியை வழிநடத்தினர் தற்போது அதிமுக ஆட்சி நடைப்பெற்றுவரும் நிலையில் முதல்வர்,துணை முதல்வர் அதிமுகவிற்கு தலைமை வகித்து வருகின்றனர்.

அதிமுக தொடங்கப்பட்டு 47 ஆண்டுகளை நிறைவு செய்து 48 ஆம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைப்பதால் மாநிலம் முழுவதும் அதிமுகவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக ஓசூர் மாநகர அதிமுகவினர் எம்ஜிஆர் திருஉருவ சிலைக்கும், ஜெயலலிதா அவர்களின் படத்திற்க்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புக்களை வழங்கி மகிழ்ந்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்