புதுடெல்லி:
காங்கிரசின் மக்களவை குழு தலைவராக மேற்கு வங்கத்தை சேர்ந்த அதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவர் மேற்கு வங்க மாநிலத்தில் பெர்ஹாம்பூர் மக்களவை தொகுதியிலிருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தொடர்ந்து 5 முறை எம்பியாக இருந்து வருகிறார். 1996 முதல் 1999ம் ஆண்டு வரை மேற்கு வங்க எம்எல்ஏவாகவும் பொறுப்பு வகித்தவர்.
கடந்த 2012ம் ஆண்டு வரை ரயில்வே இணை அமைச்சராகவும் பதவி வகித்தவர்.