சென்னை:
தமிழ்த் திரையுலகில் ‘பேட்ட’ படம் த்ரிஷாவுக்கு வெற்றிகரமாக அமைந்தது. தற்போது, ‘ராங்கி’, ‘பரமபதம் விளையாட்டு’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபகாலமாக த்ரிஷா தன்னுடைய ரசிகர்களுக்கு சமூக வலைதளங்களில் பதிலளித்து வருகிறார். திருமணம் பற்றிய ரசிகர்களின் கேள்விக்கு, ‘‘சிங்கிள் தான்.. ஆனால், தேர்வு செய்து விட்டேன்’’ என்றும் ‘‘தேவைப்படும்போது செய்யுங்கள், தேவைப்படாதபோது வேண்டாம்’’ என பதிலளித்துள்ளார்.
தற்போது 35 வயதை கடந்த த்ரிஷாவுக்கு, கடந்த 2015ல் தொழிலதிபர் வருண்மணியனுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்று திருமணம் நின்றுவிட்டது. தற்போது ரசிகர்களுக்கு அளித்த இந்த பதிலால் திருமணம் செய்துகொள்ளும் முடிவில் த்ரிஷா இருக்கிறார் என தெரிகிறது.