காஞ்சிபுரம்:
நடிகர் சங்க நிலம் தொடர்பான விசாரணையில் சம்மன் அனுப்பியும் நடிகர் விஷால் ஆஜராகவில்லை.
தென்னிந்திய நடிகர் சங்க நிலம் தொடர்பான விசாரணைக்கு நடிகர் விஷால் ஆஜராகும் படி காஞ்சிபுரம் மாவட்டம் குற்றப்பிரிவு அலுவலகத்திலிருந்து சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால், இன்று நடைபெறும் விசாரணைக்கு நடிகர் விஷால் ஆஜராகவில்லை. படப்பிடிப்பில் இருப்பதால் வேறு ஒரு நாளில் ஆஜராவதாக அவர் சார்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.