லாக்டவுனால் பட வாய்ப்பின்றி பழம் விற்கும் நடிகர்

லாக்டவுனால் பட வாய்ப்பின்றி பழம் விற்கும் நடிகர்

இப்போது கொரோனா வைரஸ் பலரது வாழ்வை முழுமையாக மாற்றி போட்டிருக்கிறது. கொரோனாவால் திரைத்துறையும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் படப்பிடிப்புகள் தொடங்காத நிலையில் இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான சினிமா தொழிலாளர்கள், துணை நடிகர்கள் பசி, பட்டினியில் சிக்கி தவித்து வருகின்றனர். அப்படியானவர்களில் ஒருவர் தான் இந்தி நடிகர் சோலங்கி திவாகர். ஆயுஷ்மான் குர்ரானாவின் ட்ரீம் கேர்ள் உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமான திவாகர், கொரோனா ஊரடங்கால் பட வாய்ப்பின்றி அவதிப்பட்டு கொண்டு வந்தார். இதனால் வறுமையில் சிக்கிய அவர், குடும்பத்தை காப்பாற்ற தெருக்களில் பழம் விற்கும் தொழிலில் இறங்கியிருக்கிறார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்