சென்னை:
தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பதற்கு நடிகர் சூர்யா தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பதிவில், படிக்கும் வயதில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் கல்வியோட்டத்தில் இணைப்பது கடினமானதென்று அகரம் தன் களப்பணிகளில் உணர்ந்திருக்கிறது.
மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்கு பொதுத்தேர்வு தீர்வாகாது. 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்றும் கல்வி அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் நன்றிகள் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.