ஸ்ரேயாவுடன் நடனமாட 200 ரூபாய் கொரோனா நிதி

ஸ்ரேயாவுடன் நடனமாட  200 ரூபாய் கொரோனா நிதி

நடிகை ஸ்ரேயா தனது ரஷிய காதலர் ஆண்ட்ரீ கோச்சை திருமணம் செய்து கொண்டு ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா நகரில் வசித்து வருகிறார். இவரது கணவருக்கு சமீபத்தில் லேசான கொரோனா அறிகுறி இருந்தது. உடனடியாக தனிமைப்படுத்தப்பட்ட அவர் தற்போது குணமடைந்துள்ளார். இந்த நிலையில் ஸ்ரேயா கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: நானும், எனது கணவரும் நலமுடன் இருக்கிறோம். கொரோனா பணியில் என்னையும் இணைத்துக் கொள்ள விரும்பினேன். இதற்காக ‘தி கைண்ட்நஸ் புராஜக்ட்’ என்ற அமைப்புடன் இணைந்துள்ளேன்.

ஆதரவற்ற முதியவர்கள், தினசரி கூலித் தொழிலாளர்கள், வீடற்றவர்கள், அனாதைகள் மற்றும் ஊனமுற்றோர் ஆகியோருக்கு உதவ ஒரு திட்டத்தை முன்னெடுத்திருக்கிறேன்.200 ரூபாய் கொரோனா நிதியாக அந்த அமைப்புக்கு அனுப்பினால் அதன் ரசீதை அவர்கள் எனக்கு அனுப்பி வைப்பார்கள். வருகிற 9ந் தேதி வரை அனுப்புகிறவர்களில் இருந்து சிலரை குலுக்கல் முறையில் தேர்தெடுத்து அவர்களை சந்திக்க இருக்கிறேன். அவர்கள் என்னுடன் லைவாக யோகா செய்யலாம், அல்லது நடனம் ஆடலாம். ஒன்றாக வேடிக்கையாக இருப்போம், மேலும் சில நன்மைகளையும் செய்வோம் என்கிறார் ஸ்ரேயா.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்