மும்பை:
மகாராஷ்டிராவின் மும்பை – புனே நெடுஞ்சாலையில் கார் மீது லாரி மோதியதில், நடிகை ஷபானா ஆஸ்மி காயமடைந்தார்.
மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டத்தில் உள்ள மும்பை -புனே தேசிய நெ டுஞ்சாலையில், நடிகை ஷபானா ஆஸ்மி தனது கணவர் மற்றும் பாடல் ஆசிரியர் ஜாவீத் அக்தருடன் காரில் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது, கார் மீது எதிரே வந்த லாரி மோதியதில் அவரும், கார் ஓட்டுநரும் படுக £யமடைந்தனர். அவரது கணவர் மற்றும் பாடல் ஆசிரியர் உயிர் தப்பினர்.
இதனையடுத்து, காயமடைந்தவர்களை உடனடியாக சிகிச்சைக்காக புனே மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். இதுகுறித்து போலீசார் வழ க்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.