கோவை:
அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் எதிர்ப்பு தெரிவித்து பாமகவிலிருந்து நடிகர் ரஞ்சித் விலகி டி.டி.வி.தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைத்துக்கொண்டார்.
இதன் பின்னர் அமமுகவில் இணைந்த பின்னர் தேர்தலுக்கு தானாகவே பல மாவட்டங்களுக்கு பிரச்சாரத்துக்கு சென்றார்.
ஆனால் சென்ற அனைத்து மாவட்டங்களிலும் அமமுகவின் மாவட்டச் செயலாளர்கள் ரஞ்சித்தை வரவேற்கவோ அல்லது கூட்டத்தில் பேசுங்கள் என்று கூட சொல்லவில்லையாம்.
மேலும், ரஞ்சித்தை யாருமே கண்டுகொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. சில மாவட்ட செயலாளர்கள் ரஞ்சித் போன் செய்தால் அதனை கட் செய்து விடுவார்களாம்.
இதனால் அமமுகவில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் நடிகர் ரஞ்சித் அமமுகவில் இருந்து ஒதுங்கியே உள்ளார்.
இந்நிலையில் அவர் அமமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வந்த வண்ணம் உள்ளது.