கொலை முயற்சி புகாரில் நடிகர் பார்த்திபன்!

கொலை முயற்சி புகாரில் நடிகர் பார்த்திபன்!

சென்னை:

இயக்குனரும், நடிகருமான பார்த்திபன், தன்னை கொலை செய்ய முயற்சி செய்ததாக, பாடலாசிரியர் ஜெயங்கொண்டான் நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

ஜெயங்கொண்டான், சென்னையில் ‘கவிஞர் கிச்சன்’ என்ற பெயரில் உணவகம் நடத்தி வந்தார். இந்த உணவகம் அருகே பார்த்திபன் வீடு இருந்ததால், அவரிடம் 10 ஆண்டுளாக உதவி இயக்குநராக பணியாற்றி வந்தார்.

ஒரு சில படங்களில் பாடல்களை எழுதியுள்ளார். பார்த்திபன் வீட்டிலும் பணியாற்றி வந்துள்ளார். கடந்த ஆண்டு பார்த்திபன் வீட்டில் கொள்ளை நடந்த நிலையில், ஜெயங்கொண்டான் உள்பட அனைத்து பணியாட்களையும் பார்த்திபன் நிறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் பார்த்திபன், ஜெயங்கொண்டானை தொடர்பு கெவருமாறு அழைத்துள்ளார். இதனை நம்பி அங்கு சென்ற தம்மை பார்த்திபன் மற்றும் உதவி இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அடித்து உதைத்ததாகவும், 3வது மாடியிலிருந்து தள்ளிவிட முயற்சித்ததாகவும் ஜெயங்கொண்டான் காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்