சென்னை:
காமெடி நடிகர் கிருஷ்ணமூர்த்தி இன்று மாரடைப்பால் காலமானார்.
நடிகர் கிருஷ்ணமூர்த்தி சுமார் 50 படங்களுக்கும் மேல் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்தவர். 55 வயதாகும் இவர், தொடர்ந்து வடிவேலுவுடன் சேர்ந்து கமெடியில் கலக்கி வந்தார். ‘தவசி’ படத்தில் வடிவேலுடன் இணைந்து கிருஷ்ணமூர்த்தி செய்த காமெடி இப்போதும் தொலைக்காட்சிகளில் தினமும் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்நிலையில், புதிய படம் ஒன்றின் படப்பிடிப்புக்காக குமுளி சென்றிருந்த கிருஷ்ணமூர்த்தி, இன்று அதிகாலை 4.30 மணிக்கு மாரடைப்பால் உயிர் பிரிந்தது. இவருக்கு மகேஷ்வரி என்ற மனைவியும், பிரசாந்த் மற்றும் கவுதம் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.
நடிகர் கிருஷ்ணமூர்த்தியின் மறைவுக்கு தமிழ் திரையுலத்தினரும் அவரது ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.