மாளிகை தேவையில்லை..ஊரில் தோட்டம் கிணறுகள் போதும் என டைவு அடிக்கும் கதிர்

மாளிகை தேவையில்லை..ஊரில் தோட்டம் கிணறுகள் போதும் என டைவு அடிக்கும் கதிர்

கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்க வேண்டிய நிலை நீடிக்கிறது. ஜாலியாக சுற்றி தீர்ந்தவர்கள் தற்போது கூண்டு கிளிகளாக இருக்கின்றனர்.

ஆனால் பரியேறும் பெருமாள், பிகில் போன்ற படங்களில் நடித்த கதிர், தந்து சொந்த ஊர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாராபாளையம் என்னும் ஊருல உள்ளார். இப்போது தனது சொந்த ஊரில் சொகுசாக இருக்கிறார். வீட்டு தோட்டத்தில் இருக்கும் பெரிய கிணற்றில் டைவடிக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சென்னை போன்ற பெரிய நகரங்களில் உள்ள மக்களுக்கு செல்போன், சமையல், டிவி, தூக்கம் வீட்டுக்குள்ளேயே இருப்பது என்பது மிகவும் கஷ்டமான விஷயம் தான்.

ஆனால் கிராமங்களில் வீட்டுக்கு பின்புறமே தோட்டம், கிணறு இருப்பதால் வீட்டில் இருப்பது என்பது பெரிய விஷயமாக இருக்காது. அப்படி தான் இந்த குவாரண்டைனை செமையாக என்ஜாய் செய்து வருகிறார் நடிகர் கதிர். இதை பார்க்கும் கோடம்பாக்கத்து நடிகர்கள் தங்கள் மாளிகை வீட்டில் இருப்பதை விட இவரை பார்த்து பொறாமை பட வாய்ப்புள்ளது போல் இருக்கிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்