சென்னை:
பாதுகாவலர்களுக்கு சம்பள பாக்கி வைத்த நடிகர் ஜெயர் ரவியின் மேனேஜர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ஜெயர் ரவி சென்னையில வசித்து வருகிறார். அவரது அலுவலகத்துக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் இரண்டு பேரை வேலைக்கு வைத்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் அவர்களை வேலையில் இருந்து ஜெயம் ரவி நீக்கியதாக கூறப்படுகிறது.
நான்கு மாதமாகியும் இன்னும் சம்பளம் தராததால் அது பற்றி பாதுகாவலர்களின் நிறுவனத்தின் மேனேஜர் காவல் நிலையத்தில் ஜெயம் ரவியின் மேனேஜர் சேஷகிரியின் மீது புகார் அளித்துள்ளார்.