மரத்தை கட்டிப்பிடித்து போராட்டம்

மரத்தை கட்டிப்பிடித்து போராட்டம்

மும்பை:

மும்பை ஆரே காலனியில் உள்ள மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து மரத்தை கட்டிப்பிடித்து பெண் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

மும்பையின் ஆரே காலனியில் மெட்ரோ ரயில் பணிமனை அமைப்பதற்காக அங்குள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை வெட்ட அரசு முடிவு செய்தது. இதனை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, நேற்று நள்ளிரவு முதல் மரங்களை வெட்ட அரச தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மரங்களை வெட்ட முயற்சிக்கும்போது, சமூக ஆர்வலர் ஒருவர் மரத்தை கட்டிப்பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்