லாரி மோதி விபத்து; ஐயப்ப பக்தர்கள் காயம்

லாரி மோதி விபத்து; ஐயப்ப பக்தர்கள் காயம்

ஒசூர்:

ஒசூர் அருகே ஐய்யப்ப பக்தர்கள் வீடுதிரும்பியபோது முன்னாள் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் குழந்தை உட்பட 6 பேர் காயமடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த காந்திநகர் என்னுமிடத்தில் ஐய்யப்ப பக்தர்கள் வந்த வாகனம் முன்னாள் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

கர்நாடக மாநிலம், பெங்களூரு மாவடி பகுதியிலிருந்து குழந்தை உட்பட 6 ஐய்யப்ப பக்தர்கள் மூன்று தினங்களுக்கு முன்பு சபரிமலை கோவிலுக்கு டெம்போ டிராவலர் வாகனத்தில் சென்றுள்ளனர்.

இன்று காலை வீட்டிற்கு செல்ல பெங்களூருவை நோக்கி வந்த டெம்போ டிராவலர் வாகனம் ஒசூர் அடுத்த காந்தி நகர் என்னுமிடத்தில் முன்னாள் சென்ற வாகனங்களை முந்தி செல்ல முயன்றபோது எதிர்பாராத விதமாக லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் டெம்போ டிராவலர் வாகனத்தில் இருந்த 6 பேரும் காயங்களுடன் ஒசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்