சந்திப்பூர்:
வான்வெளியில் குறிப்பிட்ட இலக்கை அதிவேகமாக தாக்கும் ‘அப்யாஸ்’ ஏவுகணை சோதனை வெற்றிபெற்றுள்ளது.
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பில், ஒடிசா மாநிலம், சந்திப்பூர் டெஸ்ட் ரேஞ்சிலிருந்து, ‘அப்யாஸ்’ எனும் அதிவேகமாக இலக்கை தாக்கும் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.
இந்த ‘அப்யாஸ்’ ஏவுகணை வான்வெளியில் அதிவேகமாக குறிப்பிட்ட இலக்கை தாக்கி வெற்றி பெற்றுள்ளது. இந்த சோதனை பல்வேறு ராடார் மற்றும் எலக்ட்ரோ ஆப்டிக் சிஸ்டம் மூலம் கண்காணிக்கப்பட்டது.