ஆட்சி அமைக்க உரிமை கோரிய சிவசேனா

ஆட்சி அமைக்க உரிமை கோரிய சிவசேனா

மும்பை:

சிவசேனா கட்சியின் ஆதித்யா தாக்கரே, மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்தார்.

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சிவசேனாவுடன் பா.ஜ., கூட்டணி முறிவு ஏற்பட்டதையடுத்து, ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வந்தது. இதனைத்தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்ரேவுடன் சந்தித்து பேசினார்.

இதனைத்தொடர்ந்து, இன்று மாலை காங்கிரஸ் செயல் தலைவர் சோனியா காந்தியை, தொலைபேசியில் தொடர்புகொண்டு உத்தவ் தாக்கரே பேசினார். அப்போது காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஆதித்யா தாக்கரே உள்ளிட்ட சிவசேனா தலைவர்கள் இன்று மாலை மகாராஷ்டிர கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்