ரூ.13 கோடி சுருட்டல்; 12 பேர் கைது

ரூ.13 கோடி சுருட்டல்; 12 பேர் கைது

புதுடெல்லி:

போலி கால் சென்டர் அமைத்து, வங்கிக்கணக்குகளில் ரூ.13 கோடி சுருட்டிய 12 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லியில் உள்ள ரோஹினி பகுதியில் போலி கால் சென்டர் ஒன்றை போலீசார் இன்று கைப்பற்றினர்.

இதுகுறித்து ரோகிணி டி.சி.பி எஸ்.டி.மிஸ்ரா கூறுகையில், வங்கி கணக்குகளில் மோசடியில் ஈடுபட்டவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4 மாநிலங்களில் உள்ள 6 நகரங்களில் 14 வங்கிக் கணக்குகளில் இந்த மோசடி நடைபெற்றுள்ளது.

சுமார் 220 பேரிடம் ரூ.13 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டள்ளது எனவும், மேலும் விசாரணை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்