புதுடெல்லி:
நாடுமுழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை வரும் 23ம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலையொட்டி விதிமுறைகளுக்கு மாறாக சமூக வலைத்தளங்களில் பதிவுகள் செய்யப்படுகிறதா என தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணித்து வந்தது.
இந்நிலையில், விதிமுறைகளை மீறியதாக பேஸ்புக்கில் 650 பதிவுகளும், டுவிட்டரில் 220 பதிவுகளும், 31 ஷேர்சேட் பதிவுகளும், கூகுளில் 5 பதிவுகளும், வாட்ஸ்அப்பில் 3 பதிவுகள் உள்ளிட்ட மொத்தம் 909 சமூக வலைத்தள பதிவுகளை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது.