போராட்டத்தால் ரூ.88 கோடி நாசம்

போராட்டத்தால் ரூ.88 கோடி நாசம்

புதுடெல்லி:

குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தால் இந்திய ரயில்வேத் துறையின் ரூ.88 கோடி சொத்துக்கள் சேதமடைந்துள்ளன.

இதுகுறித்து இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் ரூ.88 கோடி மதிப்புள்ள ரயில்வே சொத்துக்கள் சேதமடைந்தன.

இதில், கிழக்கு ரயில்வே மண்டலத்தில் ரூ.72 கோடி மதிப்புள்ள சொத்துக்களும், தென்கிழக்கு ரயில்வே மண்டலத்தில் ரூ.13 கோடி மதிப்பு சொத்துக்களும் சேதமடைந்தன.

மேலும், நார்த் ஈஸ்ட் எல்லைப்புற மண்டலத்தில் ரூ.3 கோடி சொத்துக்களும் சேதமடைந்துள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

 

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்