கரூர்:
தமிழகம் முழுவதும் ஓராண்டுக்குள் 820 மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கரூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மின்சார பேரூந்துகள் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதாகவும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகரங்களிலும் விரைவில் 520 மின்சார பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவித்தார்.