ஒசூர்:
ஒசூரில் பணம் வைத்து சூதாடியதாக 8பேர் கைது, 38 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்து நகர போலிஸ் அதிரடி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகர பகுதியில் பணம் வைத்து சூதாடி வருவதாக ஒசூர் நகர போலிசாருக்கு வந்த இரகசிய தகவலின்படி
விரைந்து சென்ற போலிசார், இராம்நகரில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 8 பேரை கையும் களவுமாக பிடித்தனர், மேலும் சூதாட வைத்திருந்த 38 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
பிடிப்பட்ட 8பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள, ஒசூர் நகர போலிஸ் மாநகரம் முழுவதும் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த இருப்பதாகவும் கூறினார்.
ஒசூர் போலிசாரின் தொடர் அதிரடி நடவடிக்கையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்.