7 பேருக்கு தூக்கு

  • In General
  • November 27, 2019
  • 218 Views
7 பேருக்கு தூக்கு

டாக்கா:

பங்களாதேஷில் இந்திய பெண் உட்பட22 பேரை சுட்டுக்கொன்ற வழக்கில் 7 இஸ்லாமியர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு பங்களாதேஷ் தலைநகர் டாக்காவின் குல்சன் பகுதியில் உள்ள கபே ஓட்டல் ஒன்றில், ஜமாஅதுல் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்த 8 பேர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் இந்திய பெண் உட்பட 22 பேர் கொல்லப்பட்டனர்.

பங்களாதேஷ் பயங்கரவாத தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நடந்த விசாரணையில், குற்றவாளிகளான ஹதிசூர் ரஹ்மான், ராகிபுல் ஹசன் ரீகன், அஸ்லம் ஹொசைன் ராஷ், எம்.டி.அப்துஸ் சபூர் கார், ஷரிபுல் இஸ்லாம் கலீத், மாமுனூர் ரஷீத் ரிப்பன் மற்றும் ஜஹாங்கிர் ஹொசைன் ஆகியோருக்கு நீதிபதி எம்.டி.மஜிபுர் ரஹ்மான் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்